Monday, December 16, 2013

கல்வியின் குறிக்கோள்

  • மனிதனுக்குள் புதைந்திருக்கும் பரிபூரணத்தன்மையை வெளிப்படுத்துவது தான் கல்வியின் குறிக்கோள்.
  • மன உறுதியும், அதை வெளிப்படுத்தும் விதமும், பயன்தரும் விதத்தில் மனஆற்றலை அமைப்பதும் பயிற்சிகள் கல்வியில் இடம்பெற வேண்டும். 
  • வெறும் புள்ளிவிபரங்களைச் சேமிப்பதில் பயனில்லை. மனதை ஒருமுகப்படுத்துவதாக கல்வித்திட்டம் அமையவேண்டும். 
  • மூளைக்குள் பல்வேறு விஷயங்களைத் திணித்து வைப்பதால் யாருக்கும் பயனில்லை. அவை ஜீரணமாகாமல் வாழ்நாளெல்லாம் தொந்தரவையே கொடுக்கும்.
  • தன்னம்பிக்கையைத் தந்து ஒருவனைத் தன் சொந்தக்கால்களில் நிற்கும்படி செய்வதில் தான் கல்வியின் உண்மையான வெற்றி இருக்கிறது.
  • ஐந்தே ஐந்து உயர்ந்த கருத்துக்களைக் கிரகித்துக் கொண்டு அவற்றை வாழ்வில் சரிவரக் கடைபிடித்தால் கூட, கல்வி கற்ற பயன் ஒருவருக்கு கிடைத்துவிடும்.
  • சிங்கம் போன்ற மன உறுதி, நல்ல ஒழுக்கம், பிறருக்கு உதவி புரியும் குணம் ஆகியவையே கல்வி பெற்றதன் அடையாளங்கள்.

Sunday, December 15, 2013

FAQ

தங்களுக்கு கணினியில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் கிழ்கண்ட கமண்ட் (Commants) பாக்ஸ்-ல் டைப் செய்து போஸ்ட் செய்யுங்கள்... தங்களுடைய வினாக்களுக்கு பதில் ( Screenshot ) மூலம் குறப்படும்.

ஆண்களுக்கான மச்ச பலன்




  • இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் தீர்காயுள்.
  • நெற்றியின் வலப்புறத்தில் மச்சம் இருந்தால் எதிர்பாராத தனப்பிராப்தி கிடைக்கும்.
  • வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷகரமான மனைவி அமைவார்.
  • வலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென பெரும் செல்வமும் புகழும் கிடைக்கும்.
  • வலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்கள் உறவினர் மூலம் புகழ் கிடைக்கும்.
  • வலது கண்ணுக்குள் வெண்படலத்தின் மேற்புறத்தில் மச்சம் இருந்தால் அவர் ஆன்மீக சிந்தனையுள்ளவராக புகழ் பெற்று விளங்குவார்.
  • இரு கண்களில் ஏதெனும் ஒன்றில் வெண்படலத்தின் கீழ் புறத்தில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு பல பிரச்சனை சந்திப்பார்கள்.
  • இரு கண்களில் ஏதேனும் ஒரு வெளிப்புற ஓரத்தில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை சீராக இருக்கும். இருப்பினும் தனது வாழ்நாளில் அவர் ஏதேனும் ஒரு வன்முறை சம்பவத்தை சந்திப்பார்.
  • இடது புருவத்தில் மச்சமிருந்தால் பணக்கஷ்டமான வாழ்க்கை அமையும்.
  • இடது கண் வெண்படலத்தில் மச்சமிருந்தால் வறுமையான வாழ்க்கை அமையும் இருப்பினும் அதை சமாளிக்கும் பக்குவமும் இருக்கும்.
  • இடது கண்ணின் வலப்புறத்தில் சொத்து விஷயங்களில் சங்கடங்களை சந்திப்பார்கள். இருப்பினும் ஓரளவுக்கு சொத்தை சேகரித்து விடுவார்கள்.
  • இடது கண்ணின் இடப்புறத்தில் மச்சம் இருந்தால் உறவினர்களுடன் பிரச்சனை ஏற்பட்டு தனிநபர் ஆவார்கள். இருப்பினும் அவர்களது வாழ்நாளின் பிற்பகுதியில் அதிர்ஷ்டத்தை அடைவார்கள்.
  • மூக்கின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால் அவர்கள் எல்லா சௌகரியமும் பெற்றிடுவார்கள்.
  • மூக்கின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் நினைத்ததை நடத்தி முடிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள்.
  • மூக்கின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் எதை நம்பாதவர்களாக இருப்பார்கள். தவறான பெண்ணின் நட்பு_சிநேகமும் இவர்களுக்கு இருக்கும்.
  • மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் அவர்கள் தயக்க குணம் உள்ளவர்களாக இருப்பார்கள், சற்றே கர்வமும், சற்றே பாதுகாப்பு உணர்வும் இவர்களிடம் மிகுந்திருக்கும்.
  • மூக்கின் கீழே மச்சமுள்ளவர்கள் கேடான வழிகளில் பணத்தை செலவிடுபவர்களாக இருப்பார்கள்.
  • நாசித்துவாரங்களுக்கு மேலே மச்சம் உள்ளவர்கள நவநாகரீக மோகமுள்ளவர்களாக இருப்பார்கள். வசதியான வாழ்க்கையை கொண்டிருப்பார்கள்.
  • மேல் உதட்டிலோ அல்லது கீழ் உதட்டிலோ மச்சம் இருந்தால் அவர்கள் காதல் உணர்வு மிகுந்திருப்பார்கள்.
  • மோவாயில் மச்சம் இருந்தால் செல்வாக்கு, புகழ் இவற்றோடு சமூகத்தில் நல்ல மதிப்பு பெற்றிருப்பார்கள்.
  • மோவாயின் இடதுபுறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் மேடு, பள்ளமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள், கல்வியறிவும் குறைவாக இருக்கும்.
  • மோவாய்க்கு அடியில் மச்சம் இருந்தால் அவர்கள் இசையில் வல்லுநர்களாக இருப்பார்கள்.
  • வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவருக்கு பிறரை வசீகரிக்கிற சக்தி இருக்கும். உறவினர்கள் அவரை மிகவும் நேசிப்பார்கள். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
  • இடப்புறக் கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர் வறுமை, உயர்வு என இரண்டு விதமான வாழ்க்கையை மாறி, மாறி அனுபவிப்பார்.
  • வலது காதில் மேல் நுனியில் மச்சம் இருந்தால் தண்ணீரில் கண்டம் இருக்கக்கூடும்.
  • இடது காதின் மேல் நுனியில் மச்சம் இருந்தால் பெண்கள் சம்பந்தமான விஷயங்களில் எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும்.
  • இரண்டு காதுகளிலும் மச்சம் இருந்தால் அவர் அதிர்ஷ்டக்காரர். பேச்சுதிறன், பிறரை வசீகரிக்கும் ஆற்றல், செல்வம் எல்லாமும் அவரை வந்தடையும்.
  • தொண்டையில் மச்சம் இருந்தால் திருமணத்தின் மூலம் அவர்களுக்குச் சொத்து கிடைக்கும்.
  • கழுத்தின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் பங்காளிகளின் மூலம் பெயரும், புகழும், சொத்தும் கிடைக்கும்.
  • கழுத்தின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் அவர் மிதமான நலன்களுடன் வாழ்வார்.
  • இடது மார்ப்பில் மச்சம் இருந்தால் ஆண் குழந்தைகள் நிறைய பிறக்கும். பெண்களிடம் மிகுந்த பாசமாக பழகுவார்.
  • வலது மார்பில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை நடுத்தரமாக இருக்கும். பெண்கள் குழந்தைகள் நிறைய பெற்றிடுவார்.
  • மார்பின் மேல் புறத்தில் மச்சம் இருந்தால் பிறர் விஷயங்களில் தேவையில்லாம தலையிடும் குணத்துடன் இருப்பார். அமைதியான சுபாவமும் கடுமையான உழைப்பாளியாகவும் இருப்பார்.
  • வயிற்றின் மீது மச்சம் உள்ளவர்கள் பொதுவாக பெறாமை குணம் நிறைந்தவராக இருப்பார்கள்.
  • வயிற்றின் இடப்புறத்தில் மச்சமிருந்தால் நல்ல குணங்களையும் உழைத்து வாழ விரும்பும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
  • வயிற்றில் கீழ்பக்கத்தில் மச்சம் இருந்தால் பலவீனமானவனாக இருப்பான்.
  • தொப்புள் மீது மச்சம் இருந்தால் அவன் வசதியான வாழ்க்கைக்கு சொந்தக்காரனாக இருப்பான்.
  • வலது தோளில் மச்சம் இருப்பவர் சின்ன சின்ன விஷயக்களுக்கு கூட மனதை அலட்டிக் கொள்வார்.
  • வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் நல்ல நண்பர்களின் நட்பைப் பெற்றிருப்பார்கள்.
  • இடது உள்ளங்கையில் மச்சம் உள்ளவர்கள் தேவையில்லாத பிரச்சனைகளை தன் பக்கம் இழுத்துக் கொண்டு கஷ்டப்படுவார்கள்
  • முதுகில் மச்சம் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகளாகவும், பக்திமான்களாகவும் இருப்பார்கள்.
  • முதுகின் வலப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் பயந்த சுபாவம் உள்ளவராக இருப்பார்.
  • முதுகின் இடப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் சிறப்பான வாழ்க்கையை பெற்றிருப்பார். தீவிரமாக ஆலோசித்து பிறகு எந்த காரியத்தையும் செய்யும் மனநிலை அவருக்கு இருக்கும்.

Saturday, December 14, 2013

தோல்விக்கான விதிகள்...



‘பிஸினஸில் தோல்வியைச் சந்திக்க பத்து விதிகள்’ - என்ன இது, தலைப்பே தடாலடியாக இருக்கிறது என்று பார்க்கிறீர்களா? கோகோ - கோலா கம்பெனியின் முன்னாள் தலைவர் டொனால்ட் ஆர் கியோக் எழுதிய இந்த புத்தகம் தான் இன்றைக் ஹாட் கேக்காக விற்பனையாகிறது.

“மாறுதல் நிறைந்த பிஸினஸ் உலகில் வெற்றி பெறத்தான் புதுப்புது விதிகளும் வழிகளும் தேவை. ஆனால் அவற்றை வரையறை செய்வது கடினம். இன்று சரியென்று தெரியும் பாதை, நாளை தவறானதாக மாறிவிடும் வாய்ப்பு அதிகம். 

ஆனால், ஏற்கனவே தோல்வியைத் தழுவிய, இனி தழுவப்போகும் அனைத்து பிஸினஸ்களும் எதைச் செய்ததால் / செய்தால் தோல்வியை உறுதியாகத் தழுவலாம் என்று பட்டியலிட்டால் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான பத்தே விதிகள் தான் மிஞ்சும். 

இந்த விதிகளைத் தவிர்த்தாலே நீங்கள் வெற்றிக்கு வழி கண்டுவிடுவீர்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும், இவற்றைப் பின்தொடர்ந்தால் தோல்வி நிச்சயம் என்று திட்டவட்டமாகச் சொல்கிறார் டொனால்ட்.

வாழ்நாள் முழுக்க அவர் பெற்ற அனுபவத்தை சாறுபிழிந்து, பிஸினஸ் மேனேஜர்களுக்கும் சி.இ.ஓ. களுக்கும் 10 விதிகளாகச் சொல்கிறார்.

1. ரிஸ்க் எடுப்பதை நிறுத்திவிடுங்கள்.
2. மாற்றங்கள் எதையும் செய்யாமல் பிடிவாதமான குணத்துடன் இருங்கள்
3. மேனேஜரோ/சி.இ.ஓ.வோ உங்கள் நிறுவனத்தில் இருப்பவர்கள் யாரிடமும் பேசாமல், பழகாமல் தனிமையில் வாழுங்கள்.
4. நான் தவறே செய்யமாட்டேன் என்ற இறுமாப்புடன் இருங்கள்.
5. தவறாகப் போய்விடும் வாய்ப்பிருக்கும் ரேஞ்சிலேயே உங்கள் தொழிலை எப்போதும் நடத்திச் செல்லுங்கள்.
6. எதையும் யோசித்து செய்யாதீர்கள்.
7. வெளியாட்களின் சிறப்பறிவை (எக்ஸ்பர்ட்டைஸ்) மட்டுமே முழுமையாக நம்பியிருங்கள்.
8. உங்களை அதிகாரக் குவியலின் மையமாக்கிக் கொண்டு என்னைக் கேட்டுத்தான் எல்லாம் நடக்க வேண்டும் என்று சொல்லுங்கள். உங்கள் அதிகாரத்தை ரசித்து அனுபவியுங்கள்.
9. வரும், ஆனா வராது; கிடைக்கும், ஆனா கிடைக்காது போன்ற குழப்பமான தகவல்களையே உங்களின் கீழ் இருப்பவர்களுக்கு அனுப்புங்கள்.
10. எதிர்காலத்தை நினைத்து எப்போதுமே பயத்துடன் செயல்படுங்கள்.

இந்த விதிகளை விதிகளாக மட்டும் சொல்லாமல் அவருடைய நேரடியான சொந்த அனுபவங்களிலிருந்து பல்வேறு உதாரணங்களைச் சுட்டிக்காட்டியும், அவருடைய கேள்வி ஞானத்திலிருந்து பல்வேறு முன்னனி நிறுவனங்களில் நடந்த சில நடைமுறை உதாரணங்களைச் சுட்டிக்காட்டியும் எழுதியுள்ளார். 

உதாரணத்திற்கு, உங்கள் நிறுவனத்தில் இருப்பவர்கள் யாரிடமும் பேசாமல் பழகாமல் தனிமையில் வாழுங்கள் என்ற விதியை ஃபாலோ செய்வது மிகவும் சுலபமானது என்று அடித்துச் சொல்கின்றார் அவர். உங்களின் கீழ் வேலை பார்ப்பவர்களை உங்களுக்குத் தொல்லை தருபவர்களாக நினைத்துக் கொள்ளுங்கள். எப்போது பார்த்தாலும் உங்களிடம் வந்து அதில் பிரச்னை இதில் மாற்றம் தேவை என்று நச்சரித்து உங்கள் நேரத்தை வீணடிப்பார்கள். உங்கள் நேரம் எவ்வளவு பொன்னானதுÐ எனவே, ஒருவரையும் உங்களை அண்டவிடாமல் வாழப் பழகுங்கள்.

கூட இருக்கின்றவர்கள் பேரைக்கூட தெரிந்து கொள்ளாதீர்கள். பேரைத் தெரிந்து வைத்து என்ன பிரயோஜனம்? ஒருநாள் அந்த நபர் உங்கள் நிறுவனத்திலிருந்து வேலையைவிட்டு போய்விடுவார். பெயரைத் தெரிந்து வைத்துக்கொள்ள நீங்கள் செலவிட்ட நேரம் வேஸ்ட்தானேÐ என்று சுவாரஸ்யமாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகிறார். 

இன்னமும் மேலேபோய் உங்கள் ஆபீஸில் போட்டோகாப்பியர் எங்கே இருக்கின்றது என்பதைக்கூட தெரிந்து கொள்ளாதீர்கள். அப்போதுதான் நிச்சயமாகத் தோல்வியைத் தழுவ முடியும் என்பது அவர் செய்யும் உச்சகட்ட கேலி. இப்படிச் செய்துவீட்டீர்கள் என்றால் உங்களை நாடி வருபவர்கள் எல்லோரும் நல்ல செய்தியை மட்டுமே கொண்டுவருவார்கள். இதையும் தாண்டி கெட்ட செய்திகளை தப்பித்தவறி யாரும் கொண்டுவந்து விட வாய்ப்புள்ளது. அதனால், எல்லோர் மனதிலும் பயத்தை உண்டு பண்ணுவதுபோல் நடந்து கொள்ளுங்கள். 

யாரும் உங்களை அண்ட மாட்டார்கள் என்கிறார். 
சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளின் தொகுப்பாக இருக்கும் இந்த புத்தகத்துக்கு வாரன் பஃபெட் முன்னுரை எழுத, பில்கேட்ஸ், ஜாக் வெல்ச், ரூபர்ட் முர்டாக் போன்ற பிஸினஸ் ஜாம்பவான்கள் இந்த புத்தகத்தைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள். இந்தப் புத்தகத்தைத் தொழில் முனைவோர்களும், மேனேஜர்களும் வருடம் ஒரு முறையாவது படித்து தங்கள் செயல்பாடுகளில் இந்த விதிகள் தப்பித்தவறி ஒட்டிக்கொண்டுள்ளதா என்று பார்ப்பது அவசியம்.

நினைவாற்றலை மேம்படுத்த எளிய வழிகள்

மூளையைத் தூங்க விடாதீர்கள் ! நினைவாற்றலை மேம்படுத்த எளிய வழிகள்

பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
1. கவனமான பார்வை

2. ஆர்வம், அக்கறை
3. புதிதாகச் சிந்தித்தல்


இந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப் பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ளலாம். அதற்கான சில பயிற்சி முறைகளைப் பார்ப்போம். முதலாவதாக ஒரு பயிற்சி.
ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணுங்கள். பிறகு 2,4,6 என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள். பிறகு 100 லிருந்து தலைகீழாக, 100, 98 96, என்று இரண்டு இரண்டாகக் குறைத்து எண்ணுங்கள். பிறகு நான்கு நான்காகக் குறையுங்கள். இப்படியே 5,6,7 வரை தாவித் தாவி குறைத்து எண்ணுங்கள். இப்படி ஏழு ஏழாக குறைத்து எண்ணக் கற்றுக் கொண்டீர்கள் என்றால், உங்களுடைய நினைவுத் திறன் நல்ல அளவில் வளர்ந்திருக்கிறது என்று அர்த்தம்.
இப்போது ஓர் ஆங்கிலப் பத்தரிகையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பத்தியில் எஸ். எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். அடுத்து இரண்டு மூன்று பத்திகளில் உள்ள எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். இப்போது மீண்டும் ஒரு முறை திருப்பிப் பார்த்தீர்கள் என்றால், எத்தனை எஸ் அல்லது ஏவை எண்ணாமல் விட்டிருப்பீர்கள் என்று தெரியவரும். அதை வைத்து உங்கள் நினைவுத் திறனின் அளவை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

புதிய சிந்தனை மூலமும் நினைவுத் திறனை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம்தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பாரங்கள். அந்த விளம்பரம் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுங்கள். வேறு எந்த மாதிரி இந்த விளம்பரம் இருந்திருந்தால், இதைவிட நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். சிந்திக்க சிந்திக்க மூளையின் சிந்திக்கும் ஆற்றல் வளர்வதோடு நினைவாற்றலும் பெருகும். முயன்று பாருங்கள்.

இதே போன்று இன்னொரு பயிற்சி. உங்கள் நெற்றியை கற்பனையாக நீங்களே 6 அறைகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு அறையை இழுங்கள். அதில் மறுநாள் 9 மணி புரோகிராம் என்று எழுதிப் போடுங்கள். (உதாரணமாக 9 மணிக்க சம்பந்தன் ஐயாவை சந்திக்க வேண்டும் என்று கற்பனையாக எழுதிப் போடுங்கள்). பிறகு அந்த அறையை இழுத்து மூடுங்கள்.
இதே போன்று இரண்டாவது அறையைத் திறந்து இன்னொரு புரோகிராம் எழுதிப் போடுங்கள். அதே போன்று அடுத்தடுத்த நான்கு அறைகளும், இப்படிச் செய்து விட்டால் இரவு படுக்கையில் படுத்ததும் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். இந்த 6 புரோகிராம்களும் அடுத்தடுத்து உங்களை அறியாமலே உங்கள் மனதில் தோன்றும். இன்னும் இதே போன்று நீங்கள் கூட புதிய புதிய முறைகளைக் கையாண்டு உங்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.
புத்தகங்களைப் படிப்பது, காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருந்து அன்றைய நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது, அபிப்யாசங்கள் செய்வது இதனாலெல்லாம் கூட உங்கள் சிந்திக்கும் திறனையும், நினைவுத்திறனையும் வளர்த்துக் கொண்டே போகலாம்.
உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஓர் இயந்திரம். அதிலும் இதயமும், மூளையும், ஓய்வில்லாத இயந்திரங்கள். இதயம் ஓய்வு எடுத்துக் கொண்டால் வாழ்க்கை நின்று விடும். மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய்விடும்.
ஆகையால் எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும் வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள். நினைவாற்றலை மேம்படுத்துங்கள். நினைத்ததைச் சாதியுங்கள்.