Sunday, February 9, 2014

Good ol’ COFFEE SHOPS are about more than just catching up with friends


As a teenager, Srinidhi Raghu was a regular at coffee shops, spending time there with a huge group of friends. “Their tagline, a lot can happen over a coffee, was so appealing. But now I go to coffee shops to work undisturbed, or to spend some quiet time over a cup of coffee,” says the 29-year-old photographer. With unlimited WiFi, an in-house library and good music, her favourite coffee shop in Adyar, says Srinidhi, provides a congenial atmosphere to finish her work. Remember J.K. Rowling? Yeah, she wrote a substantial portion of the first Harry Potter novel in a local café. Perhaps, there is an author in Chennai’s coffee shops, writing her magnum opus even as you read this. Chennai’s cafés are setting themselves apart from restaurants and hotel lounges by providing their customers much more than space. They have amped up music, the lighting is cool and comfortable and there are books, internet, board games, TV, food and a lot more to go with your coffee. “There is that lone reader or someone with a laptop, happily disconnected from the physical world or looking for time to connect with friends on social media, the single person looking for attention, the friends meeting up to chat… we have to take care of everybody,” says Raju Purushothaman who works at the Café Coffee Day in Kilpauk. A regular at Coffee Central in T. Nagar, Anjana Sri says she loves going there and the Zha Cafe because they let you play board games. “Barista was perhaps where it all began, with board games, a place to jam and someone playing the guitar all the time,” she says.
When it comes to combining technology with a lot of love for books, Chennai is no pushover. Chennai’s own are trying to combine their love for one with the other, and make a profit of it. The technique is simple: browse titles in a book store, then go home, log on to the internet and buy them online at a much lower price. Harish, an avid bookworm, says the distinguishing factor between online bookstores and the physical ones is the discount the former gives, and that’s why he prefers to buy online now. Several youth in the city resort to this. Sivaraman Balakrishnan, marketing head, Landmark, talks about newer marketing strategies to take on these online book stores: the pioneering ‘3 for 2’ concept wherein people get the third book free if they buy two; and focus on children. “Landmark has done both. With children, parents tend to take them to bookstores to inculcate the reading habit, and also to allow the child to make her own choice of what she wants to read.” T.V. Swaminathan, director, Connexions, says most of the books sold online are top-of-the-chart ones, whereas for old titles and classics, a bookstore is still the place to go. He suggests that to keep the book business above water, it is better to avoid setting up stores inside malls where the rent is prohibitive.

Saturday, February 8, 2014

கடிதம் வழியே மனிதம்

ஒரு முறை செல்லும்போது, ‘உங்களுக்காக உழைக்கும் காலணிகள் இங்கே கொஞ்சம் ஓய்வெடுக்கட்டுமே…’ என்று எழுதப்பட்டிருக்கும். அடுத்த முறை செல்லும்போது, ‘அண்ணா… உங்கள் பாதுகைகளை நான் பாதுகாத்துக்கொள்கிறேன்… இப்படிக்கு பரதன்’ என்று எழுதப்பட்டிருக்கும். இன்னொருமுறை செல்லும்போது அலுவலக வரவேற்பறைக்குள் மரம் முளைத்திருக்கும். தரையெல்லாம் சருகான இலைகள் உதிர்ந்து கிடக்கும். பிரிதொரு முறை செல்லும்போது மணல் கொட்டியிருப்பார்கள்.

இத்தனை வித்தியாசம் காட்டுபவர் யாரென்று சொல்ல வேண்டுமா என்ன? இயக்குநர் இரா. பார்த்திபன் அலுவலகம் செல்வதென்றால் இப்படியான ஏதேனும் ஓர் ஆச்சரியத்தை எதிர்நோக்கியே நாம் செல்ல வேண்டியிருக்கும். அலுவலக வாசலில், ‘அனுமதிக்கு முன் அனுமதி வேண்டும்’ என இருக்கும் வாசகத்தைத் தாண்டி அனுமதி இல்லாமலே செல்வதற்கு எப்போதுமே பத்திரிகையாளர்களுக்கு சுதந்திரம் கொடுத்திருப்பவர் பார்த்திபன்.

வித்தியாசம் என்பதற்காக எதையும் முயற்சித்துப் பார்க்கும் மனிதர் பார்த்திபன். அவருடைய அறை மேசையில் ஒரு கோக் தம்ளர் கொட்டி கோலா மேஜையில் பரவியிருக்கும். ஐயோ என்று அதை எடுத்தால் அது கோக் சிதறியது போன்ற
பொம்மையாக இருக்கும்.
குடிப்பதற்குக் காப்பி கொடுத்தால்கூட அது காப்பியா காப்பி மாதிரியா என்று சந்தேகம் வரும். ஆனால், மிகச் சிறந்த காப்பியை நம்மை ருசிக்க வைப்பார். காப்பி குடித்த பிறகு அதன் பூர்வீகம், அது எப்படி அவரை வந்து அடைந்தது என்பதைச் சுவையாக
 விவரிப்பார்

உதவியாளரை தேடி வந்த வித்தகன்

ஒரு நாள் அதிகாலை ஐந்தரை மணிவாக்கில் அழைப்பு மணி ஒலிக்க, போய் வாசல் கதவைத் திறந்தால் பார்த்திபன் நின்றுகொண்டிருந்தார். என்னுடைய அறை நண்பர் கரு. பழனியப்பன் அப்போது அவரிடம் உதவி இயக்குநராக இருந்தார். கதை விவாதத்தில் முதல் நாள் பேசிய ஒரு விஷயத்தில் தனக்கு தோன்றிய ஒரு கருத்தைச் சொல்லி பழனியப்பனின் பதிலைத் தெரிந்துகொள்வதற்காக வந்திருந்தார். அழைத்தால் ஓடி வரவேண்டியவர்தானே உதவியாளர் என்று நினைக்காமல் அவரைத் தேடி வந்திருந்த பார்த்திபன் அப்போதுதான் வித்தியாசமா இருக்காரே என்று நினைக்க வைத்தார்.

நண்பர்களுக்கு அவர் தரும் பரிசுகள் ஆச்சரியமூட்டுவதாக இருக்கும். ஒருமுறை ஒரு போட்டோபிரேம் கொடுத்தார். அதில்

இதுதான்

நிரந்தரமென

இதனுள் எதையும்

நிரப்பாவிட்டால்

எதிர்சுவர் ஓவியம்

ஜன்னலோர குருவி

செல்ல நாய்க்குட்டி

முத்த மழலை

சுடிதார் மின்னல்கள்

நிஜ நிலா

மழைத் தோரணங்கள்
…
இப்படி,
விரும்பும் யாவும் -இந்த

வெற்றிடத்தை நிரப்பும்!

என்று எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்திருந்தார். இதைத் தாண்டி நம் புகைப்படத்தை அதில் எப்படி வைக்க முடியும்? அவரது சொற்களோடு இன்றும் வரவேற்பறையில் இருக்கிறது அந்த போட்டோ பிரேம்! நினைவுப் பரிசு என்பது அவரைப் பொறுத்தவரையில்தான் எப்போதும் நினைவுப் பரிசாகவே இருக்கும்.

கடிதம் வழியே மனிதம்

தன்னுடைய இதயத்தை தானமாகக் கொடுத்து எல்லோர் இதயத்திலும் இடம் பிடித்த ஹிதேந்திரனுக்கு நினைவஞ்சலிக் கூட்டம். அதை ஏற்பாடு செய்திருந்த நண்பர்கள், திரைப் பிரபலங்கள் வந்தால் இன்னும் கவனம் பெறும் என்ற அடிப்படையில் என்னிடம் பார்த்திபனை அழைக்க முடியுமா என்று கேட்டார்கள். அவரைக் கைபேசியில் அழைத்தபோது ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்புக்காக அம்பாசமுத்திரத்தில் இருக்கிறேன் என்றார். அப்படியே நான் வந்தாலும் உங்களுக்கே என்னை அடையாளம் தெரியாது. ஏனென்றால் என்னை அத்தனை கறுப்பாக்கி வைத்திருக்கிறார்கள் என்றார். ஆனால் நல்ல விஷயத்தில் பங்கெடுத்துக்கொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் அவர் குரலில் தெரிந்தது.

நானும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நண்பர்களிடம் சொல்லிவிட்டு இயக்குநர் மெட்டி ஒலி திருமுருகனை அழைத்தேன். அவர் உடனே ஒப்புக்கொண்டார். நிகழ்ச்சி அன்று ஹிதேந்திரனின் ஊருக்குத் திருமுருகனின் காரில் செல்வதாகத் திட்டம். அன்று காலையில் பார்த்திபனின் உதவிஇயக்குனர் குமார் தொலைபேசியில் அழைத்தார். “சார் உங்ககிட்டே கொடுக்கச் சொல்லி ஒரு கவர் கொடுத்திருக்கார். நான் அதை எங்கே கொண்டு வந்து தரணும்?” என்றார். நானே போய் வாங்கிக்கொண்டேன்.

அந்த கவரில் இரண்டு கடிதங்கள் இருந்தன. முதலாவது கடிதம் எனக்கு. அதில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமல் போனதற்காக வருத்தம் தெரிவித்து எழுதியிருந்தார். இன்னொரு கடிதத்தை அந்த நிகழ்ச்சியில் தன் சார்பாக வாசித்துவிட்டு ஹிதேந்திரனின் தந்தை அசோகனிடம் கொடுத்துவிடுமாறு எழுதியிருந்தார். அம்பாசமுத்திரம் படப்பிடிப்பிலிருந்த அவரிடம் அன்று நான் பேசிய பின்னர், சென்னைக்குப் புறப்பட்ட யூனிட் நண்பர் ஒருவரிடம் இந்தக் கடிதத்தைக் கொடுத்து, அதைத் தனது உதவியாளர் குமார் மூலம் சேர்ப்பிக்கச் செய்திருந்தார். ஒரு நிகழ்வில் தன் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காக அவர் காட்டிய அக்கறை சிலிர்ப்பாக இருந்தது. நிச்சயம் அந்தக் கடிதம் ஹிதேந்திரனின் தந்தைக்கு ஆறுதலாக இருந்திருக்கும்.

பார்த்திபன் தன் நண்பர்களுக்குத் தரும் திருமண பரிசு அசத்தலாக இருக்கும். திரைப் பிரபலங்களின் திருமணமாக இருந்தாலும் சாதாரணர்களின் திருமணமாக இருந்தாலும் அவர் தரும் பரிசு ஒரே மாதிரிதான். ஒரு கடிகாரம்தான் அவர் தரும் பரிசு. ஆனால், அந்தக் கடிகாரத்தை அவரே உருவாக்கியிருப்பார். அதில் ஒரு பட்டு வேட்டியின் நுனியும் கூரைப் புடவையின் நுனியும் முடிச்சிடப்பட்டிருக்கும். சந்தோஷம் உங்களை நொடிமுள்ளாகத் துரத்தட்டும் என்று எழுதிக் கையெழுத்திட்டிருப்பார்.

என் திருமணத்துக்கும் அவர் தந்த பரிசு அதுதான். இன்றும் கிராமத்தில் என் வீட்டில் அந்தக் கடிகாரத்தின் நொடி முள் குடும்பத்தின் சந்தோஷத்தைத் துரத்திக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது!



Tuesday, February 4, 2014

நீயும் இந்தப் பரந்த உலகத்தில் தேடு

சோம்பலால் வறுமையில் வாடிய ஒருவன் ஒருமகானைச் சந்தித்து, தனது வறுமையைப் போக்கும்படி வேண்டினான்.

அவனது சோம்பலை உணர்ந்த அந்த மகான் அவனுக்கு அதை உணர்த்த ஒரு கதையைக் கூறினார் -

ஒரு மரங்கொத்திப் பறவை, தன் கூரிய அலகால் டொக் டொக்கென்று மரத்தைக் கொத்திக் கொண்டே அந்த மரத்தின் மேல் தாவித் தாவி ஏறியது. அதைப் பார்த்த ஒரு மனிதன், ""மூடப் பறவையே, எதற்காக மரம் முழுவதையும் கொத்திக் கொண்டிருக்கிறாய்? இது வீண் வேலையல்லவா?'' என்று கேட்டான்.

அதற்கு அந்தப் பறவை, ""மனிதனே நான் என் உணவைத் தேடுகிறேன். தேடினால் கிடைக்கும்...'' என்றது.

அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தொடர்ந்து மரத்தைக் கொத்தி, மரத்தில் ஓட்டை போட்டு, அதற்குள் பதுங்கியிருந்த புழுக்களை எடுத்து உண்ண ஆரம்பித்தது.

தனது உணவைச் சாப்பிட்டு முடித்த பிறகு, அந்த மனிதனைப் பார்த்து, ""மனிதனே, நீயும் தேடு... மரத்திலும், மண்ணிலும், நீரிலும் ஏன் எல்லா இடங்களிலும் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும்'' என்றது.

கதையைச் சொல்லி முடித்த மகான்,

"நீயும் இந்தப் பரந்த உலகத்தில் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும். சோம்பேறியாக இருந்தால் வறுமைதான் கிட்டும்'' என்றார்.

Monday, February 3, 2014

வாழ்க்கையில் முன்னேற இதுதான் வழியா?

வாழ்க்கையில் முன்னேற இதுதான் வழியா?

*
ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்றுபேரையாவது பாராட்டு.

*
மாதம் ஒரு முறையாவது சூரிய உதயத்தைப்பார்.

*'
நன்றி','தயவுசெய்து'-இந்த வார்த்தைகளை முடிந்தவரை அதிகம் உபயோகி.

*
உன் வசதிக்கும் தகுதிக்கும் உட்பட்டு வாழக் கற்றுக்கொள்.

*
உன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறாயோ, அப்படியே நீயும் மற்றவர்களை நடத்து.

*
ரகசியங்களைக் காப்பாற்று.

*
புதிய நண்பர்களைத் தேடிக்கொள்:பழைய நண்பர்களை மறந்துவிடாதே.

*
தொழில் ரகசியங்களைக் கற்பதில் நேரத்தை வீணடிக்காமல் தொழிலைக் கற்றுக் கொள்.

*
உன் தவற்றை தயங்காமல் ஒத்துக்கொள்.

*
தைரியமாக இரு.உண்மையில் அவ்வாறு இருக்க முடியாவிட்டாலும், அப்படித் தோற்றம் அளி

*
ஒரு போது மற்றவரை ஏமாற்றாதே.

*
கவனிக்கக் கற்றுக்கொள்.சந்தர்ப்பங்கள் அமைதியாக சில நேரம் தான் வரும்.

*
கோபமாக இருக்கும்போது ஒரு முடிவும் எடுக்காதே.

*
உன் தோற்றத்தில் எப்போதும் கவனம் இருக்கட்டும்.

*
மேலதிகாரிகளையோ பெரியவர்களையோ சந்திக்க செல்லும்போது காரணத்துடனும் நம்பிக்கையுடனும் செல்.

*
ஒரு வேலை முடியுமுன் கூலி கொடுக்காதே.

*
வதந்தி,வம்பு பேசுவதைத் தவிர்.

*
போரில் வெற்றி பெற சண்டையில் விட்டுக்கொடு.

*
ஒரே சமயத்தில் நிறைய வேலைகளை ஒத்துக் கொள்ளாதே.பணிவாக மறுத்து விடுவதில் தவறில்லை.

*
வாழ்க்கை எப்போதும் ஒரே சீராக இருக்கும் என்று எதிர்பாராதே.

*
பொருட்கள் வாங்கும்போது சிறந்ததையே தேர்ந்தெடு.

*'
எனக்குத் தெரியாது', மன்னிக்கவும்', என்பதை சொல்லத் தயங்காதே.

Sunday, February 2, 2014

பால் புகட்டலில் தாய்மார்கள் சந்திக்கும் பிரச்சனைகள்

இந்த பூமியில் அவதரிக்கும் ஒவ்வொரு குழந்தையின் முதல் உணவு தாய்ப்பாலாக இருக்க வேண்டும். குழந்தை பிறந்த சில மணி நேரங்களிலேயே அதற்கு தாய்ப்பால் கொடுக்க தொடங்கிவிடலாம். மற்ற எந்த உணவிலும் இல்லாத அளவிற்கு, தாய்ப்பாலில்தான் அதிகச் சத்துக்கள், என்சைம்ஸ், ஹார்மோன்ஸ், வளர்ச்சி காரணிகள், விட்டமின் சத்துக்கள், நோய் எதிர்ப்பு சக்தி எல்லாம் அடங்கியுள்ளது. குழந்தை பிறந்து, குறைந்தது ஆறு மாதம் வரையிலாவது, கண்டிப்பாக தாய்ப்பால் புகட்டல் வேண்டும். தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, தாய்மார்களுக்கும் நன்மை தரக்கூடியது. பாலூட்டுதல் தாய்மார்களுக்கு ஒரு சுகமான அனுபவமாக இருப்பதோடு, குழந்தையுடனான பிணைப்பினை அதிகரிக்கவும் செய்கிறது.

பால் புகட்டலில் தாய்மார்கள் சந்திக்கும் பிரச்சனைகள்

குழந்தைக்கு பாலை உறிஞ்சத் தெரியவில்லை என்பது சிலரின் குறையாக இருக்கும். பிறக்கும் குழந்தைகளுக்கு இயல்பிலேயே வாயில் வைக்கும் எதையும் உறிஞ்சும்(சப்பும்) குணம் இருக்கும். சில குழந்தைகள் விதிவிலக்காக ஆரம்பத்தில் தடுமாறலாம். ஆனால், பழக்கத்தில் எல்லா குழந்தைகளுக்கும் அந்த பழக்கம் வந்துவிடும். பாலை உறிஞ்சத் தெரியவில்லை என்று தொடர்ந்து வேறு வழிகளில் பால் புகட்டக்கூடாது. தாய்ப்பால் அதிகம் சுரப்பதற்கும் குழந்தைகள் பாலை உறிஞ்சுக் குடித்தல் அவசியமான ஒன்று. எனவே, பால் புகட்டலை பழக்கத்தில் உண்டு செய்யவேண்டும்.

நிறைய பேரின் மற்றொரு கவலை, பால் பற்றவில்லை என்பது. தாய்ப்பால் சுரக்க என்ன வழி என்ற கேள்வியை அனைவரிடமும் கேட்டு கொண்டிருப்பார்கள். குழந்தை பெற்றவர்கள் அனைவரும் தங்களது உணவு விசயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தாங்கள் சாப்பிடும் உணவே பாலாக குழந்தைக்கு செல்கின்றது என்பதையும், அது நல்ல உணவாக இருக்க வேண்டும் என்பதிலும் நிறைய அக்கறை காட்ட வேண்டும்.

சத்தான உணவுகள், எண்ணெய், காரம் குறைவான உணவுகள் எடுத்துக்கொள்ளுதல் நலம். வழக்கமாய் சாப்பிடுவதை விட சற்று அதிகமாக சாப்பிட வேண்டும். உணவில் அதிக அளவில் பருப்பு சேர்த்துக்கொள்ளுதல் அவசியம். அசைவம் சாப்பிடுபவர்கள் முட்டை, மீன் நிறைய சாப்பிடலாம். ட்ரை ப்ரூட்ஸ், நட்ஸ், முந்திரி, பாதாம் போன்றவை சாப்பிடுவதும் பால் சுரப்பிற்கு உதவிடும். பால் சுறா மீன் அல்லது கருவாடு சமைத்து அடிக்கடி சாப்பிடவும். பூண்டு அதிகம் சேர்த்துக்கொள்வதும் பால் அதிகம் சுரக்க வழி செய்யும். பூண்டினை நறுக்கி நெய்யில் வறுத்து, சிறிதளவு சாதத்துடன் சேர்த்து தினமும் சாப்பிடலாம். இதைத் தவிர தினமும் குறைந்தது முக்கால் லிட்டர் பசும்பால் குடித்தல் வேண்டும். பாலுடன் மதர் ஹார்லிக்ஸ் போன்ற மாவுக்களை கரைத்து குடித்தல் இன்னமும் சிறப்பானது.

பால் கொடுக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.

எப்போதும் உட்கார்ந்த நிலையில் பால் கொடுக்க வேண்டும். படுத்துக்கொண்டே பால் கொடுத்தால், குழந்தையின் கழுத்து ஒருபுறமாக சாய்ந்து, பால் உறிஞ்ச சிரமம் உண்டாகும். குழந்தைக்கு கழுத்து வலியையும் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல், படுத்த நிலையில் இருப்பதால், தாயும், குழந்தையும் அப்படியே உறங்கிவிடும் வாய்ப்பு உள்ளது. இதனால் பால் குழந்தையின் மூக்கில் ஏறி, விபரீதங்கள் உண்டான சம்பவங்கள் நிறைய நடக்கின்றன. பால் கொடுக்கும்போது தாயானவள் கண்டிப்பாக உறங்கக்கூடாது. அதேபோல் குழந்தை பால் குடிக்கும்போது உறங்கிவிட்டால் உடனடியாக குழந்தையை மார்பில் இருந்து விலக்கி, தூங்க வைக்கவேண்டும்.


அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்கள், சில காலத்திற்கு குழந்தையை தூக்கி பால் கொடுத்தல் இயலாது. இவர்களுக்கு படுத்த நிலையில் பால் கொடுத்தல்தான் எளிதானது. அப்படி கொடுக்கும்பட்சத்தில், மேலே சொன்ன விசயங்களில் எச்சரிக்கையாய் இருத்தல் வேண்டும். அதுமட்டுமன்றி, கூடிய விரைவில் அந்த பழக்கத்தில் இருந்து மாறுதல் வேண்டும்.

பிறந்த குழந்தைக்கு தலை நிற்கும் வரை மிகவும் எச்சரிக்கையாகவே பால் கொடுக்க வேண்டும். கழுத்துப் பகுதிக்கு கீழ் கையைக் கொடுத்து, கழுத்தை இறுக்காமல், தலையையும் முதுகையும் தாங்கியபடி குழந்தையை பிடித்துக்கொண்டு, அணைத்தவாறு, தலையை சற்றே தூக்கிய நிலையில் வைத்து கொடுக்க வேண்டும். குழந்தையின் மூக்கு பகுதி மார்பில் மிகவும் அழுந்தக்கூடாது. குழந்தையை நேர்மட்டத்தில் வைத்து பால் கொடுக்கும்போது புரையேறும் வாய்ப்புள்ளது. எனவே குழந்தையின் தலை சற்று உயரத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
குழந்தையை இழுத்துப் பிடித்து மார்பில் அழுத்தி பால் கொடுத்தல்கூடாது. குழந்தை படுத்திருக்கும் மட்டத்திற்கு குனிந்து பால் கொடுக்க வேண்டும். அல்லது குழந்தைக்கு மார்பு எட்டும் உயரத்திற்கு மிருதுவான தலையணையை வைத்து, அதில் குழந்தையை வைத்து பால் கொடுக்கலாம். மார்பகத்தின் எடை முழுவதும் குழந்தையின் முகத்தில் இறங்கிவிடாதவாறு எச்சரிக்கையாய் கொடுக்கவும்.

குழந்தை பால் குடித்தவுடன், தோளில் சாய்த்து பிடித்தவாறு அதன் முதுகில் மெதுவாக தட்டிக்கொடுக்கவும். குழந்தைக்கு ஏப்பம் வரும் வரை இப்படி செய்யவும்.
குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு முன்பும், கொடுத்த பிறகும், மார்பகத்தை மிதமான வெந்நீரில் நனைத்த துணியைக் கொண்டு நன்றாக துடைத்துவிட வேண்டும். குளிக்கும்போது அதிக மணம் தரும் சோப்பு உபயோகிப்பதை தவிர்க்கவும். மார்பகத்தை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

குழந்தைகள் அதிக நேரம் உறங்குவதாலும், உடற் செயல்பாடுகள் மிகவும் குறைவு என்பதாலும், வெறும் பால் மட்டும் குடிப்பதால் செரிமான பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதற்கு மருத்துவர்கள் தரும் மருந்தினை தொடர்ந்து கொடுத்து வரவும். நன்கு காய்ச்சி, ஆற வைத்த நீரை ஒரு தேக்கரண்டி அளவிற்கு தினமும் பருகக் கொடுக்கலாம். அப்படிக் கொடுக்கும்போது சிறிது சிறிதாக கொடுக்க வேண்டும்.


தவிர்க்க இயலாத சில காரணங்களால், சில தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுத்தல் இயலாது போய்விடும். தாய்பால் கொடுத்தால் அழகு குறைந்துவிடும் என்று கொடுக்காமல் இருப்போரை நாம் கணக்கில் கொள்ள வேண்டாம். தாய்ப்பால் கொடுக்க இயலாதவர்கள், மருத்துவரின் ஆலோசனைப்படி பார்முலா மில்க் கொடுக்கலாம்.
ஆறுமாதம் கடந்த குழந்தைகளுக்கு என்ன மாதிரியான உணவுகள் கொடுக்கலாம் என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்.