Saturday, December 21, 2013

பெண்களுக்கு டென்ஷன் வந்தால் என்ன தான் செய்கிறோம்.

சில பெண்களுக்கு டென்ஷன் வந்தால் தான் என்ன செய்கிறோம் என்றே அவ‌ர்க‌ளுக்கு தெரியாது.கோபத்தில் என்ன பேசினார்கள் என்று கூட தெரியாது. அவர்கள் கோபம் முழுவதும் பிள்ளைகள் மேல தான் போய் விழும். வீட்டுக்காரர் மேல கோபமா?

பக்கத்து வீட்டு அம்மா மேல கோபமா? வீட்டில் உள்ள பெரியவர்கள் மேல உள்ள கோபமா? யார் மீது கோபம் வந்தாலும் பிள்ளைகளுக்கு தான் அடி விழும். பிள்ளைகளுக்கும் எதுக்கு அடி வாங்குகிறோம் என்று அவர்களுக்கு தெரியாது.

ரொம்ப கோபப்படுபவரிடம் ரொம்ப கோபப்பட்டா தோல் சுருங்கி சீக்கிரம் வயதான தோற்றம் வந்து கிழவி போல் ஆகி விடுவீர்கள் என்று சொல்லி பாருங்கள், அடுத்ததடவை கோபப்படும் போது கொஞ்சம் யோசிப்பார்கள். சில பேர் நகத்தை நறுநறுவென கடித்து கொண்டு இருப்பார்கள்.

நகம் தீர்ந்து ரத்தம் வருவது கூட தெரியாமல் இருப்பார்கள். இப்படி கோபப்படுவதால் உஙகளுக்கு சிறு வயதிலேயே இரத்த அழுத்தம் எகிறும் நிலைக்கு கொண்டு போய் விடும்.

இல்லை எனில் அடிக்கடி மயக்கம் வரும். வீட்டில் மயக்கம் போட்டு விழுந்தால் பரவாயில்லை தனியாக எங்கும் வெளியில் செல்லும் போது மயக்கம் போட்டு விழுந்தால் உங்கள் நிலையை கொஞ்சம் நினைத்து பாருங்கள். ஹார்ட் அட்டாக்கே வரலாம்.

கோபபட்டு எதையும் சாதிக்க போவதில்லை வீண் மனஸ்தாபத்தை தான் விலைக்கு வாங்கி கொள்ளனும்.. பொறுமையை கையாளுங்கள் கோபத்தை தவிருங்கள். . இப்படிபட்ட கோபத்தை தவிர்க்க எவ்வளோ நல்ல விஷயங்கள் இருக்கு அதில் நம்மை திசை திருப்பலாம்.

துணி தைப்பது, விதவிதமாக ஆர்ட் வொர்க் செய்வது, வித விதமாக சமைப்பது, பிடித்த இசை கேட்பது, இது போல் நம்மை நாமே பார்த்துகொண்டால் கோபப்பட நேரம் கூட இருக்காது.

Friday, December 20, 2013

திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!!


பொதுவாக திருமணம் என்று வரும் போது, நிறைய பேர் பெண்கள் தான் அதிகம் தியாகம் செய்கிறார்கள் என்று சொல்வார்கள். ஆனால் பெண்களைப் போலவே ஆண்களும் ஒருசில முக்கியமானவற்றை இழக்கிறார்கள் என்பது தெரியுமா? ஆம், எப்படி பெண்கள் திருமணத்திற்கு பின் பெற்றோர்கள், தோழிகள் மற்றும் பலவற்றை இழக்கிறார்களோ, அதேப் போன்று ஆண்களும்  அவர்களுக்கு சந்தோஷத்தைத் தரும் சிலவற்றை இழக்கின்றனர் என்பதை விட தியாகம் செய்கின்றனர் என்ற சொல்லலாம். ஆனால் இப்படி இழப்பதை அவர்கள் ஒருபோதும் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில் அப்படி வெளிக்காட்டினால், பின் திருமண வாழ்க்கையில் உள்ள சந்தோஷம் மற்றும் ஆரோக்கியம் போய்விடும் என்பதால் தான். குறிப்பாக உலகிலேயே இந்தியாவில் உள்ள ஆண்கள் தான் திருமணத்திற்கு பின் நிறையவற்றை தியாகம் செய்கின்றனர். சரி, இப்போது அப்படி திருமணத்திற்கு பின் ஆண்கள் எவற்றையெல்லாம் இழக்கின்றனர் என்பதை பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்த்து சரிதானா என்று சொல்லுங்க


அமைதி 

திருமணத்திற்கு பின் ஒவ்வொரு ஆணும் இழக்கும் விஷயங்களில் ஒன்று தான் அமைதி. அது என்னவோ தெரியவில்லை, மூன்று முடிச்சு போட்ட பின்னர் அது எங்கு சென்று ஒழிந்து கொள்ளுமோ தெரியவில்லை.

அம்மா
 ஒவ்வொரு ஆணுக்கும் அம்மா என்றால் உயிர். ஆனால் அந்த உயிரை திருமணம் ஆன பின்னர் ஒரு கட்டத்தில் தாயுடன் இருக்கும் நாட்களை ஆண்கள் இழப்பார்கள். இந்த இழப்பு அவர்களது மனதில் எவ்வளவு பெரிய வடுவாய் இருந்தாலும், அதனால் உண்டான வலியை அவர்கள் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். அதற்காக அம்மாவை காணவே செல்லமாட்டார்கள் என்று சொல்ல முடியாது.

நண்பர்கள்
 பெண்கள் மட்டும் திருமணத்திற்கு பின் தோழிகளை இழப்பதில்லை. ஆண்களும் தான் திருமணத்திற்கு பின் நண்பர்களை இழக்கின்றனர். முற்றிலும் இழக்காவிட்டாலும், அவர்களுடன் நினைத்த நேரத்தில் எல்லாம் நேரத்தை செலவிட முடியாது. ஏனெனில் நண்பர்களை விட தன்னை நம்பி வந்த மனைவி தானே முக்கியம். அதனாலேயே பல ஆண்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவதில்லை.


ஆண் ஈகோ

திருமணத்திற்கு முன், ஒரு பொருளைக் கூட நகர்த்தாமல் இருக்கும் ஆண்கள், திருமணத்திற்கு பின் ஈகோவை விட்டு பல்வேறு வேலைகளை மனைவிகளுக்காக செய்கின்றனர். அம்மாவிற்கு கூட இவ்வளவு வேலை செய்திருக்கமாட்டார்கள். ஆனால் திருமணத்திற்கு பின் மனதில் ஈகோ கொள்ளாமல் மனைவிக்காக அனைத்தையும் செய்வார்கள்.

பணம்
பணம் சம்பாதித்து தனக்கென்று எதையும் செலவிடாமல், மனைவியை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்று ஷாப்பிங் மற்றும் தியேட்டர் அழைத்துச் செல்வது, பரிசுகள் வாங்கிக் கொடுப்பது என்று பல செலவுகளை செய்வார்கள்.

சுதந்திரம் 
முக்கியமாக சுதந்திரத்தை இழப்பார்கள். திருமணத்திற்கு முன், விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவது, ட்ரெக்கிங் செல்வது, சுற்றுலா செல்வது என்றெல்லாம் இருந்தவர்கள், திருமணத்திற்கு பின் மனைவியுடனேயே இருப்பார்கள்.

@Copyright Minnal

Tuesday, December 17, 2013

பெண்களின் காதலை கண்டறிவது எப்படி? - படித்ததில் பிடித்தது.

இன்றைய காலத்தில் ஆண் பெண் நண்பர்களாக நீண்ட நாட்கள் இருக்க முடிவதில்லை. அவ்வாறு நண்பர்களாக பழகும் போது, அவர்களுக்குள்ளேயே ஒருவித வித்தியாசமான உணர்வுகள் வந்துவிடுகின்றன. ஆனால் அவற்றை ஆண்கள் வெளிப்படையாக தெரிவித்துவிடுகின்றனர். ஆனால் பெண்கள் சொல்லமாட்டார்கள். ஆகவே அவர்களது மனதில் உங்களை பிடித்திருக்கிறது என்பதை ஈஸியாக கண்டறிய ஒரு சில அறிகுறிகள் இருக்கின்றன. அந்த அறிகுறிகளை வைத்து பெண்களுக்கு உங்களை பிடித்திருக்கிறதா, பிடிக்கவில்லையா என்பதை கண்டறியலாம். அது என்னவென்று படித்து, உங்கள் மனதில் இருக்கும் பெண்ணிற்கு உங்களை பிடித்திருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்...

பெண்களுக்கு பிடித்தால் எப்படி நடப்பார்கள் தெரியுமா?
ஆண்களே!!!

* பெண்கள் உங்கள் கண்களை அதிகம் பார்த்து பேசினால் அவர்கள் உங்கள் மீது அதிக ஆர்வத்துடன் உள்ளனர் என்பதை அறியலாம். அதிலும் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தால், கண்டிப்பாக உங்களை பிடித்திருக்கிறது என்று அர்த்தம்.

* பெண்களுக்கு உங்களை பிடித்தால், அவர்களே உங்களை அடிக்கடி தொடுவார்கள். உதாரணமாக, அடிப்பது, அடிக்கடி தொட்டுப் பேசுவது, கை குலுக்குவது, கைகளை பிடித்து நடப்பது போன்றவற்றை செய்வார்கள். ஆம், உண்மை தான். ஏனெனில் அவர்கள் உங்கள் மீது விருப்பம் இருப்பதால் தான் அவர்கள் உங்களை தொட ஆரம்பிக்கிறார்கள். பின்னர் நீங்கள் தொட்டாலும், எதுவும் சொல்லாமல், முகத்தை சுளிக்காமல், தள்ளி விடாமல் இருந்தால், நீங்கள் அதிர்ஷ்டசாலி தான். பின்னர் என்ன ஜமாய்ங்கப்பா...

* உங்கள் மீது விருப்பம் இருந்தால், பெண்கள் அதிக நேரம் உங்களுடன் பேசுவார்கள். மேலும் எவ்வளவு தான் நண்பர்களுடன் கூடி பேசிக் கொண்டிருந்தாலும், அவர்கள் உங்களுடன் பேசுவார்கள் அல்லது மெசேஜ் செய்வார்கள். முக்கியமாக எந்த நேரத்திலும் உங்களுக்கு போன் செய்து பேசுவார்கள்.

* உங்களைப் பிடித்தால், என்ன தான் நீங்கள் பேசினாலும் பெண்கள் சிரித்துக் கொண்டே இருப்பார்கள். அது எவ்வளவு தான் படு மொக்கையாக இருந்தாலும், அவர்கள் விழுந்து விழுந்து சிரித்தால், நிச்சயம் அது காதல் தான். மேலும் உங்கள் பேச்சை அவர்கள் ரசிக்கிறார்கள் என்றும் அர்த்தம்.

* எங்கேனும் அவர்களுடன் வெளியே தனியாக போக திட்டம் போட்டு, அவர்களிடம் கேட்டு, அவர்களுக்கு வேலை இருப்பது உங்களுக்கு தெரிந்தும், உங்களுடன் வருவதற்கு ஒப்புக் கொண்டால், அந்த நேரத்தில் நீங்கள் அந்த திட்டத்தை முறியடிக்காமல், செல்லுங்கள். ஏனெனில் அவர்கள் உங்களுடன் வெளியே வந்து, அப்போதும் உங்களிடம் காதலை சொல்லும் வாய்ப்புகளும் உண்டு. இந்த சந்தர்ப்பத்தை வேஸ்ட் செய்ய வேண்டாம்.


* உங்களிடம் பேசும் போது, பெண்கள் தங்கள் முடிகளை கைகளால் சுருட்டிக் கொண்டிருப்பதை, நீங்கள் கண்டால், நிச்சயம் அவர்களுக்கு உங்கள் மீது ஒரு கண் உள்ளது என்பதை அறியலாம். இது ஒரு சிறிய சிம்டம் தான்.

* நீங்கள் வேறு ஒரு பெண்ணிடம் பேசுவதைப் பார்த்து, கோபப்பட்டால், அது கூட, உங்கள் மீது இருக்கும் ஒரு வகையான காதல் தான். ஆனால் இதை அவர்களிடம் கேட்டால், அவர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் உண்மையில் அவர்கள் உங்களை வேறு யாருக்கும் விட்டுக் கொடுப்பதை விரும்பவில்லை. இந்த நேரத்தில் அவர்களது காதல் வெளிப்படுகிறது.

நோய்களை உணர்த்தும் நகங்கள்

நகங்களை ஏதோ தேவையில்லாத பகுதியாகவோ, அல்லது அழகுபடுத்திக் கொள்வதற்கா அமைக்கப்பட்ட உறுப்பாகவோ நினைக்கிறோம். அது தவறு. மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இன்றியமையாத முக்கிய உறுப்பு நகங்களாகும். ஆனாலும் பெரும்பாலும் நாம் நகங்களில் வண்ணங்களை தீட்டிக் கொண்டு, நீளமாக வளர்த்துக் கொண்டு ஒரு அழகு சாதன உறுப்பாகவே பயன்படுத்துகிறோம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல உடலின் நலத்தை நகத்தில் தெரிந்து கொள்ளலாம். . ஆனால் மருத்துவ உலகில் நகங்களை வைத்தே நம்முடைய உடலில் என்ன பிரச்சினை என்று கூறி விடுகிறார்கள் மருத்துவ அறிஞர்கள். நகங்கள் விரல்களுக்கு அழகு சேர்க்க மட்டுமல்ல, கரட்டின் என்ற புரதச்சத்தைக் கொண்ட நகங்கள் விரல் நுனிவரை பரவியுள்ள நரம்பு மற்றும் இரத்தக் குழாய்களை பாதுகாக்கக் கூடிய ஒரு அமைப்பாகும். நகங்கள் இல்லா விட்டால் விரல்களின் முனைகளில் கடினத்தன்மை ஏற்பட்டு விடும்.. நகங்கள் மிருதுவானவை. விரல்களின் சதைப்பகுதியின் அடிப் பாகத்தில் இருப்பது. பொதுவாக ஆண்களுக்கு அதிக வளர்ச்சியும், பெண்களுக்கு பிரசவ காலங்களிலும், வயதான காலங்களிலும் வளர்ச்சி அதிகமாக இருக்கும். பொதுவாக நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் நமது உடலில் ஏற்படுகின்ற பாதிப்புகளைப் பொறுத்து நகங்களின் நிறம் வேறுபட்டிருக்கும். ஈரல் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் வெண்மையாக இருக்கும்.. சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருந்தால் நகங்களின் வளர்ச்சி குறைந்து பாதி நகங்கள் சிவப்பாக இருக்கும். மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் அழுத்தமான இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இதயத்தில் ஓட்டை ஏற்பட்டு நல்ல இரத்தமும், கெட்ட இரத்தமும் கலந்திருந்தால் நகங்கள் நீல நிறத்தில் இருக்கும். நாள்பட்ட நுரையீரல், இதய நோய் உள்ளவர்களுக்கு நகங்கள் கிளிமூக்கு போல வளைந்து இருக்கும். இரத்தச் சோகை ஏற்பட்டு இரும்புச் சத்து குறைவாக
இருந்தால் நகங்கள் வெளுத்து குழியாக இருக்கும். சர்க்கரையின் அளவு அதிகமாகவும், புரதம் மற்றும் துத்தநாக சத்து குறைவாகவும் இருந்தால் நகத்தில் வெண்திட்டுக்கள் காணப்படும். நகத்தில் மஞ்சள் கோடுகள் இருப்பதற்கு காரணம், புகைபிடிப்பதனால் நிக்கோடின் கறை படிந்து ஏற்பட்டதாக இருக்கலாம். நகங்களுக்கு பொலிஷ் தீட்டுவதால் ஏற்பட்ட இரசாயன மாற்றத்தின் காரணமாகவும் மஞ்சள் கோடுகள் இருக்கலாம். நகத்தில் சின்ன சின்னக் குழிகள் உண்டாகி, அவற்றில் வெடிப்பு ஏற்பட்டு செதில் செதிலாக உதிர்ந்தால் சொரியாசிஸ் என்ற தோல் வியாதியின் அறிகுறியாகும்.. இரத்தத்தில் போதிய அளவுக்கு ஒட்சிசன் இல்லாவிட்டால் நகங்கள் நீலமாக இருக்கும். ஆர்சனிக் என்ற நச்சுகளால் பாதிக்கப் பட்டிருந்தால் நகங்கள் நீலநிறத்தில் காணப் படும். இரத்தத்தில் சர்க்கரை அதிக அளவு இருந் தால் குறைத்துக் கொள்ள வேண்டும். அதிக அமிலத் தன்மையுள்ள சோப்பு மற்றும் புளிக்கரைசல் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. நகங்களின் நுனிப்பகுதிகளை முழுவதுமாக வெட்டக் கூடாது. அவ்வாறு வெட்டினால் நகத்தை மூடி சதை வளர்ந்து அதிக வலியினை ஏற்படுத்தும். நகத்தினை பற்களால் கடிக்கக் கூடாது. இதனால் நகங்கள் உடைந்து போக வாய்ப்பு அதிகம். நகம் வெட்டும் கருவியினால் மட்டுமே வெட்ட வேண்டும். சாப்பிட்ட பின்னர் கைகளை கழுவும்போது
நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். நகங்களின் இடுக்குகளில் தங்கும் நுண்ணுயிரிகளால் வயிற்றுத் தொல்லை, வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை உண்டாகும். நகங்கள் அழகுடன் திகழ, காய், கனிகள் நிறைய உட்கொள்ளவேண்டும். இரவில் குளிர்ந்த நீரினால் கை மற்றும் கால் நகங்களை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். உடுமலை.சு.தண்டபாணி தண்டபாணி ஆரோக்கியம் காப்போம்..! நோயின்றி வாழ்வோம்..!!